பிறந்தநாள் வாழ்த்து கவிதை
எங்கே நீ சென்றாலும்
எல்லாமும் பெறவேண்டும்
நீ போகும் பாதை எல்லாம்
பூ மாரி பொழிந்து வர
ஒன்றல்ல இரண்டல்ல
ஒருகோடி நூறாண்டு
வளமோடு நீ வாழ
உளமார வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-அமுதரசன்