மதம் ஒழிப்போம்-I–கே.எஸ்.கலை

அன்பென்னும் மதம் கெடுத்து
═══அட்டூழிய விதைத் தூவி
அகிலமெங்கும் ஆட்டம்போடும்
═══அறிவுகெட்ட மதநோயாளிகளே...
ஆணிவேரை வானில் தேடி
═══ஆவதென்ன சொல்லுங்கள்?

பிரிவினைகள் அத்தனைக்கும்
═══பிறப்பிடமாய் மதமிருக்க
கோவிலிலும் பள்ளியிலும்
═══வெகுமதியாய் நிம்மதியை
வேண்டி நீங்கள் பிரார்த்தித்தால்
═══கிடைத்திடுமா சொல்லுங்கள்?
---
நெறிப் பிறழ்ந்து அறிவிழந்து
═══வெறியூட்டும் விஷமிகள்,
வீடிழந்து விடிவிழந்து
═══நாசமாய்ப் போகும் நாளில்-
மனிதநெறி தழைத்தோங்கி
═══பூவுலகைப் புனிதமாக்கும் !

உடுத்தும் ஆடை, உண்ணும் உணவு
═══பேசும் வார்த்தை, தூக்கும் பாடை
அத்தனையும் - சுத்தமாகப் பித்தாக்கி
═══மதம் வரைந்த துவேஷக் கோடு-
அரியணையில் பிரிவினையை
═══ஆளவைக்கும் பெருங்கேடு !
---
கோவில்களை இடித்துவிட்டு
═══குடிசை கட்டி வாழவேண்டும்
பள்ளிவாசல் இடித்துவிட்டு
═══பாடசாலை கட்டவேண்டும்
தேவாலயம் இடித்துவிட்டு
═══கழனிவயல் அமைக்க வேண்டும் !

மதம் புகட்டும் நூல்களெல்லாம்
═══தணலிட்டுப் பொசுக்க வேண்டும்
மாண்பிழந்தச் சட்டமெல்லாம்
═══மண்ணுக்குள் புதைக்க வேண்டும்
மனிதம் எனும் தர்மம் மட்டும்
═══மண்மீது நிலைக்க வேண்டும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (21-Apr-13, 6:52 pm)
பார்வை : 1094

மேலே