சுகமோ சுகம் ....!

அப்பா என்னை அடித்த போது ...
தடுக்க வந்த வாங்கிய அம்மாவின் அடி ...

ஓரமாக நின்று வேண்டாமப்பா ..
வேண்டாமப்பா ..என்று கத்தும் தம்பி

ஏன் கத்துகிறோம் என்று தெரியாமல் ...
ஓலமிடும் தங்கை ...

யாதும் செய்ய முடியாமல் துடிக்கும் ..
அக்காவும் அண்ணாவும் ...

அத்தனையும் இப்போது நினைத்தால் ...
சுகமோ சுகம் ....

தந்தையே உம்மை நினைத்தேன் ...
இந்த கவிதையை கண்ணீரோடு ..
சமர்பிக்கிறேன்

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Apr-13, 4:38 pm)
பார்வை : 105

மேலே