ஆறாம் பதிப்பின் இறுதி பக்கம்

ஆறாம் பதிப்பை ஆறாம் திணையாய்
அகத்தில் பதிந்த ஆழ்ந்த கருத்துகளை
உள்ளத்தில் தோன்றிய உயிர்மெய்களை
கவிதை வடிவில் முடிந்தவரை வடித்தேன் !
இதுவரை இன்பமுடன் எனை வாழ்த்தி
ஊக்கமும் ஆக்கமும் அன்போடு அளித்து
ஏழாம் படியில் அடி எடுத்து வைத்திட
உதவிட்ட உள்ளங்களுக்கு என் நன்றி !
சந்திப்போம் ஏழாம் தொகுப்பில் மீண்டும் !
பழனி குமார்