சருகின் சலனம்

எனது பள்ளி விடுமுறை நாளுக்கு தாத்தா-பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம்.

'டேய்' - அம்மா

'ம்'- நான்

'சினிமாவுக்கு போலாமா'-அம்மா

'ம்'- நான்

'போய் தாத்தாகிட்ட கேளு' -அம்மா

'தாத்தா,சினிமாவுக்கு போவட்டுமா' - நான்

'பத்திரமா போய்ட்டு வாங்க' - தாத்தா.

மணி 6 நெருங்கிக் கொண்டிருந்தது.

'சீக்கிரம் கிளம்புமா'

'இருடா, மாவு அறைச்சிட்டு வந்திடுறேன்'

'சீக்கிரம் சீக்கிரம் '

ஊருக்கு வெளியே 2 கி.மி-ல் தியேட்டர். தொலை தூரத்தில் பாடல்.
'மருத மலை மாமணியே'--

'டேய், சீக்கிரம் வாடா, மருத மலை பாட்டு போட்டுட்டான், டிக்கட் கொடுக்க ஆரம்பிச்சிட்டான்'.

கூட்டம் வேகமாக செல்ல ஆரம்பிக்கும்.
இறை உணர்வோடு தொழில் தொடக்கம். அதே சமயம் மற்றவர்களுக்கு ஓரு Communication method.

நினைவுகளோடு மூழ்கி TV பார்க்க ஆரம்பித்தேன்.
'மருத மலை மாமணியே - பாடல்'

'பழைய பாட்டை நிறுத்தி தொலைங்க, சகிக்கல' - மகன்.

காலம் மாற்றத்தில் உதிராத சருகுகள் எவை.

எழுதியவர் : அரிஷ்டநேமி (3-May-13, 7:59 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 107

மேலே