இதுதான் காதலா

திரும்பின திசையெங்கும்
வேலால் குத்தும் கொடூரம்.

கிழக்கே சில கதறல்கள்,
வடக்கே சில வன்மங்கள்,
தெற்கே சில தன்மானத் தெறிப்பு,
மேற்கே சில மனித அத்தங்கள்.

வானத்தைப் பார்த்தேன்,
விரிந்துகிடந்த சூனியம்.

உற்று நோக்கினேன்,
மறைந்துகிடந்த உன்னின்
ஒப்பிடமுடியாத அன்பு.

அதைத்தான் காதல் என்கிறோமா?
மனமும் ஊணும் குளிர்ந்தது...

எழுதியவர் : தீ (8-May-13, 9:16 am)
பார்வை : 103

மேலே