கொண்டவள் மேல் கண்ட சந்தேகம்!!!

கானக துறவியை
தேடி,நாடி,
ஓடி இல்லற
ஐயங்களை வினவி,!!!

கொக்கயர,வெண்ணை
சிரம்மமர்த்தி,வெய்யிலில்
உருக,அக்கம்
மறையுமெ அச்சமயம்
ஆட் கொள்வோமென!!!

சமயத்தையும்,சாமத்தையும்
வீம்பாய் விரயம்
செய்து,கள்ளருந்தி,
காய்ந்த சருகாய்
மிதியடி பட்டு,
மீளா துன்பத்தில்
தனை ஆழ்த்தி!!!

துர்ருதாரண மானிடனாய்,
தாழ் தனையிட்டு,
இழி நிலை
தான் கொண்டு
பாழ் சமூகமென
பழி சுமத்தி!!!

பசி பிணி
நீக்க சுயமிழந்து,
வீதிவீதியாய் அன்னத்திர்க்காய்
கையேந்தி மலமுளைத்த
புழுவெனவே மாறுதர்ப்பூண்டு!!!

மதி இழந்து,
தனக்குதானே பிண்ணிக்கொண்ட
சதிவலையில் சிக்கி
தத்தளித்து,தவித்து
தாளாதுயர் தீராதென
நினைத்து,மாலா
வேதையில் மரணம்தான் காண்பானே!!!

துணை மேற்கொண்ட சந்தேகம்
வினையென அறியா மூடன்!!!

அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (14-May-13, 4:03 am)
பார்வை : 172

மேலே