Nilaa Pen

நினைவுகளில்
கோட்டை கட்டி
நிலவுப் பெண்ணே
அதில் உன்னை அமர்த்தி
நிதம் பார்த்திருக்கிறேன்
கனவுகளில் கூட
உனக்கு கவிதை சொல்லி
காத்திருக்கிறேன்.
கானல் நீராய்
கடந்து விடுமோ கனவுகள்
என்றே நினைத்திருந்தேன்

ஆனால்

சம்மதம் இல்லா
என் சண்டைகளும்
சத்தமில்லா
உன் மௌனங்களோடும்
கழிந்த அந்த நாழிகைகள்
கனவுகள் அல்ல
நெஞ்சோடு
நீங்காத நாழிகைகள்
நினைக்கும் போதே
இனிக்கும்
தெவிட்டாத தேன் துளிகள்
ஆயிரம் விண்மீன்
கண்ணைப் பறித்தாலும்
என் மன வானில்
ஒரே வெண்ணிலவு
நீ தான்
என் நிலவுப் பெண்ணே

எழுதியவர் : Prabha (13-Apr-10, 1:52 pm)
சேர்த்தது : Prabha
பார்வை : 927

மேலே