மகிழ்ச்சி அடைகிறேன்

இந்த தருணம்
மகிழ்ச்சி அடைகிறேன்
நான் கவிஞனாய்
இருப்பதை எண்ணி...

என்
துக்கத்தையும் துயரத்தையும்
துடைத்து எழுதுகிறது
என் பேனா
மகிழ்ச்சியென்று...

கண் மூடி
காணும் கனவுகள்
யாவும் கற்பனை என்றபோதும்
கவிஞன் வாழுகிறான்
காலம் கடந்து...

மனதினில் குவியும்
எண்ணத்தினை
வண்ணப்படுத்துகிறது
என் பேனா
மை...

அடையாததை
அடைந்தது போலும்
இயலாததை
முடிந்தது போலும்
கற்பனையில் வாழுபவனே
கவிஞன்...

இந்த தருணம்
மகிழ்ச்சி அடைகிறேன்
நான் கவிஞனாய்
இருப்பதை எண்ணி...

எழுதியவர் : சிவானந்தம் (17-May-13, 2:19 pm)
பார்வை : 260

மேலே