க(த)ண்ணீர்

தமிழ்நாடு என்ன
தனி நாடா
தண்ணீர் இல்லை என்பதற்கு

தவழ்ந்து வந்து
தாகம் தீர்த்தும்
உருண்டு வந்து
உயிர் வளர்த்தும்
உறவாடினாய்
எங்களுடன்

உன்னை ஊனமாக்கியதன்
நோக்கமென்ன????

உயிர் வளர்த்த
உன்-செவிகளுக்கு
உழவர் உயிர் பிரியும் அவலம்
உணரலையோ

கட்டளைக்கு கட்டுப்பட
கன்னடர்கள் என்ன
காந்திகளோ

கல்லாலான அணையை உடைத்து வா
காதுகிடக்கிறோம் -உன்
கால் தடம் பதிய

எழுதியவர் : திருக்குமரன்.வே (23-May-13, 4:32 pm)
சேர்த்தது : thiru
பார்வை : 91

மேலே