மறக்கமுடியுமா???

பச்சிளங்குழந்தைய
பழி தீர்த்த
பாவம் என்ன?
பக்குவமாய் அனுப்பி வைத்த
பால் முகம் மரயலையே
கக்கத்தில நீ இருந்தா
கல்வியில்லா போகுமென
பக்கத்துல படிக்க வைச்சேன்
பாதியில பிடிங்கிட்டியே
சுடு சோறு தாங்க மாட்ட
இப்ப சூடுக்குதான் சுருங்கிட்டியே
கணநேரம் கானலேனா
கதறி அழுதுடவ
கருகி நின்னபோது
காணாம எங்க போனேன்
பசின்னு நீ (தீ) சொல்லியிருந்தால்
பறந்து வந்துருப்பேன் - இப்படி
குஞ்சுகளை திண்டுவிட்ட -என்
நெஞ்சுக்குழி ஆறலையே
மார் குடிச்ச பால்
ஈரம் கூட ஆறலையே
மதியான சோத்துக்குள்ளே
மரித்துதான் போயிட்டியே
பிஞ்சுகளை பொசுக்கிய பின்ன
பீச்சி (தண்ணீர் ) அடிச்சு பயனென்ன
கொளுந்துகள கொள்ளிவச்ச
பாவம் உன்ன சேரலையா??
காலமெல்லாம் கும்பிட்ட
கடவுள் கூட
கண்ணயர்ந்து தூங்கிட்டானா?
உன்ன சொல்லி குத்தமில்லை
உதவிடத்தான் யாருமில்லை