என்னவள்

அழகிற்கு அன்னையவள்...
அமைதியை நேசிப்பவள்.
அடக்கத்தை ஆள்பவள்.
அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு இவை நான்காலும் செதுக்க பட்டவள்.
விடிவெள்ளியினை தனது மூக்குத்தியாக கொண்டவள்.
கருமை நிற வானவில் இரண்டை புருவங்கள் கொண்டவள்.
பசும்பாலின் வெண்மையை விட மென்மையானவள்.
நவரத்தினங்களால் செய்யப்பட்டவள்.
ரோஜாவின் இதழ்களை கண் இமைகளாக கொண்டவள்.
இரு இதயங்களைப் பெற்றவள்.
தேனின் சுவையை தன் இதழ்களில் இட்டவள்.
புன்னகையின் இளவரசியவள்.
புண்ணியம் கோடி செய்தவள்.
லட்சத்தில் ஒருத்தியவள்;
லட்சனத்திலும் ஒருத்தியவள்....!
அவளே "என்னவள்".