@@@ ஏழுப்பருவம் @@@

பாலூட்டும்
பாலகனாய்
உருவெடுக்கிறாய்
போலி
விளையாடும்
மீளியாகிறாய்
துன்பமன்றி
இன்பமுடன்
ஒருகணம் மறவோனாய்
சுட்டித்தனத்துடன்
மறுகணம்
திரலோனாய்
சுற்றித்திரியும்
கட்டிளங்காளையாய்
சீறுகிறாய்
வயதுப்பருவத்தில்
விடலையாய்
வீருகிறாய்
வாழ்கையின்
அனுபவத்தில்
முதுமகனாய்
ஏழுப்பருவத்தில்
முடியும்
இன்பவாழ்வில்
அன்பை பகிர்ந்து
அழகாக வாளாமால்
ஆண்மகனென்ற
கர்வத்தில்
எப்படியல்லாமோ
வீணடிக்கிறாய் ...
...கவியாழினிசரண்யா...
(பன்னிருப்பட்டியல் என்ற தமிழ் நூலின்படி ஆண்களின் ஏழுப்பருவ பெயர்கள் ,
1.பாலன் - 7 வயதுக்கும் கீழ் ,
2.மீளி -10 வயதுக்கும் கீழ் ,
3.மறவோன் - 14 வயதுக்கும் கீழ் ,
4.திறலோன் - 14 வயதுக்கும் மேல் ,
5.காளை - 18 வயதுக்கும் கீழ் ,
6.விடலை - 30 வயதுக்கும் கீழ் ,
7.முதுமகன் 30 வயதுக்கும் மேல் .)