கூட்டி கழித்துப்பார்த்தால்

நான் யாரோடு
பேசினாலும் -நீ
தான் கண்ணில்
படுகிறாய் -நீயாக
எல்லாம் தெரிகிறது

தொழுவத்தில்
கட்டிய மாடு போல்
எங்கு சென்றாலும்
உன்னிடமே திரும்பி
வருகிறது -மனம்

கூட்டி கழித்துப்பார்த்தால்
காதலின் முடிவும்
வாழ்க்கையின் பயணமும்
வலிதான்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (8-Jun-13, 6:42 am)
பார்வை : 109

மேலே