நான் கவிதை ஆகிறேன்……

எது நடந்தால்
என்னால்
தாங்கிக் கொள்ள முடியாதென்று
அதற்காக என்னைப்
பக்குவப் படுத்திக் கொள்கிறேனோ
அதில்தான்….
இன்னமும்
அதிகமாய் வீழ்ந்து போகிறேன்….!
…………………………………………………………..

என் பிறெப்பென்னும் விருட்சம்
தன் கைகளை அகலமாக்கி
கிளைகளால் இன்னும் இன்னும்
படர்ந்த போதும்
ஒரு கனியோ
ஒரு மலரோ
ஒரு பறவையின் கூடோ
தாங்காது போயினும்.....,
வெறும் நிழலுக்கும் கூட
நான் உத்திரவாதமில்லை எனில்,
உயர அகலங்களால் மட்டும்
என்னை மரமென்பதை விடுத்து
வெட்டிச் சாய்த்து
விறகென்றே சொல்லுங்கள்…..
அதுவும் பயனில்லை எனில்
அறுத்து, எரித்து, சாம்பலாக்கி
கடும் காற்றில் விசிறிடுங்கள்
சனியன்…. உருத்தெரியாமல் போகட்டும்…!

……………………………………….................

எழுதியவர் : ஆண்டன் பெனி (8-Jun-13, 10:32 am)
பார்வை : 179

மேலே