தத்துவங்கள்:- 3

ஒருமித்த நிறங்கள்
உண்டென்ற போதிலும்,
பசும்பால் ருசியுடன்
பசியை போக்கும்,
கள்ளிப்பாலோ விஷமென
உயிரை போக்கிவிடும்!!!

ஆதலால் நிறத்தை
பார்க்கதீர்கள் குணத்தை பாருங்கள்!!!
****************************************************************************
தன் தோல்வி
சுவடுகளை அகத்திலிருந்து
அழித்து ஒழித்தவன்,

வெற்றி இலக்கை
வாழ்நாளில் எந்நாளும்
எட்டுவது இல்லை!!!


தோல்விகளே வெற்றி
இலக்கின் படிகள்
தோல்விகளை சேமியுங்கள்!!!
****************************************************************************
வாழ்க்கையில் மூன்று
விதமான மனிதரை
மறக்காது இருப்பிராக,

1)
உங்கள் கடின
காலத்தில் கரம்
கொடுத்து காத்தோர்,

2)
உங்கள் கடின
காலத்தை கண்டும்
காணாது போனோர்,

3)
உங்கள் கடின
காலத்தை தோற்றுவித்தோர்!!!

****************************************************************************

சாமானியனின் வாழ்க்கையை
காட்டிலும் பன்மடங்கு
கடினமானதும்,சோதனை
மற்றும் வேதனைமிக்கதும்
சாதிக்க முற்படுபவனின்
வாழ்க்கையே ஆகும்!!!

****************************************************************************

இரண்டு ஆன்மாக்கள்
ஒத்த சிந்தனையிலும்,

அவ்விரண்டு இதயங்கள்
ஒன்றிய துடிப்பிலும்,

உள்ள இணையே
உலகின் மிகச்சிறந்த
இல்லறவாதிகள் என
போற்றப்படுவர்!!!

****************************************************************************
-அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (10-Jun-13, 2:43 am)
பார்வை : 607

மேலே