அன்பே கடவுள்!!!

ஒரு முட்டாள்
மனிதனால் கூட,
ஒரு மாதுளையில்
எத்தனை விதைகள்
உள்ளன என
கணித்து விட இயலும்,

ஆனால்
கடவுளால் மட்டுமே
ஒரு விதையில் எத்தனை
மாதுளைகள் உள்ளன
என கணிக்க இயலும்!!!

****************************************************************************

கடவுள் மனிதனை
ஏன் வெற்றி
பெறவில்லை
என எந்நிலையிலும்
வினவுவது இல்லை,

ஆனால் ஏன்
முயற்ச்சிக்கவில்லை
என நிச்சயம் கேட்பார்!!!

****************************************************************************

சக மனிதர்களோடு
அன்பு செலுத்த
தெரியாதவன்,ஒரு
பொழுதும் கடவுளை
உணர்வது இல்லை,

காரணம் கடவுளின்
நிலையான
வடிவம் அன்புதான்!!!

****************************************************************************

கடவுளிடம் பேசுவதற்கு
மொழியோ,வார்த்தைகளோ
தேவைப்படுவதில்லை,

மனதில் இருப்பதை
அப்படியே உணர்ந்து
கொள்ளும் ஆற்றல்
உடையவர் கடவுள்!!!

****************************************************************************

கடவுள்
நாம் கேட்பதை
எல்லாம் கொடுப்பதில்லை,

நமக்கு எது
மிகச்சரியான தேவையோ
அதை மட்டுமே கொடுக்கிறார்!!!

****************************************************************************

-அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (11-Jun-13, 7:31 pm)
பார்வை : 4141

மேலே