வஞ்சகம்
வஞ்சகம்
குக்கிராமம் ஒன்றதனில்,
கள்ளம் கபடம் சூது வாது,
யாதும் அறியாள் என வளர்ந்தாள்,
சேற்றில் விளைந்த செந்தாமரையென,
இயற்கை அழகில் அவள் மலர்ந்தாள்;
எழ்மை குடும்பத்தில் பிறந்தும் அவள்,
எளிய பெற்றோர்கை மகிழ்ந்திருந்தாள்;
எட்டியதும் அவள் மண வயதை,
ஆருடம் ஜோதிடம் என பார்த்து,
புத்தொரு அகமும் உட்புகுந்தாள்;
மறைந்திருந்த உள்நோக்கமது,
தன் கபட முகத்தினை புலப்படுத்தி,
நகை ,சீர்வரிசையென வதைதெடுக்க,
கரை விழுந்த மீன்போல்,
அல்லலுடன் துன்புற்றாள்.
கட்டிய கணவனும் மனைவியை மறந்து,
பரத்தையரை உடன்கொண்டு,
தீய பழக்கங்களை வெளிக்காட்டி,
இம்மகளை இழித்துரைக்க,
ஏழை பெற்றோர் கதறினரே;
மனைவியை கயவன் தீயேற்றி,
வெந்தழல்அவியும் முன்னரே மற்றொரு,
மங்கையைப் பிடித்து முன்னிறுத்தி,
எரியும் அவள் சடலத்தையே,
அக்னி சாட்சி என மணந்தனனே !
மேலுகத்தில் தனி நானில்லை,
அன்பிற்குரிய பெற்றோர் அவரும்,
பாதை எனதை பின் தொடர்ந்து,
துரிதத்தில் வந்தடைந்து,
தனிமை எனதை போக்கினரே!
சம்பத்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
