முதலில் சொல்வது யார் ?

பெரும்பாலான நமது சந்திப்பு
ஏதேனும் விசேச நாட்களிலோ
துக்க நாட்களிலோ ...

வெளிப்படுத்திக் கொள்கிறோம்
புன்னகையின் மூலம்
விசேச நாட்களிலும் !

அழுகையின் மூலம்
துக்க நாட்களிலும் !
நமது காதலை !

எவ்வளவோ
முயற்சித்தும் தோற்றது
வருகிறது ஞாபகத்திற்கு !

என்னிடத்தின் அருகே நிற்க
உன்னால் இயலாமலும் !
உன்னிடத்தின் அருகே நிற்க
என்னால் இயலாமலும்!
நம் உறவினர் புடைசூல
எடுத்துக் கொண்ட
புகைப் படத்தைப் பார்க்கும் போது!

இருமியோ, செரிமியோ தான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது
நாம் அருகில் தான் இருக்கிறோம் என்பதை
அழைப்பேசி வழியே
என் அம்மா உன் வீட்டாரிடமோ,
உன் அம்மா என் வீட்டாரிடமோ,
பேசும் போது!

நிறைய விசேஷங்கள்
வந்துகொண்டே இருந்தாலும்
ஏனோ இருக்கிறது வேதனையாய்!
நமக்குள்ளான விசேசமான செய்தியை
நம்மில் முதலில் சொல்வது யார் என்பதில்
போட்டி தொடர்வதால் !

சொல்ல மறந்து விட்டேன்
95 முடிந்து யாருக்கும்
தொல்லை கொடுக்காமல்
போய் விட்டாராம் நம்
தூரத்து உறவுக்காரத் தாத்தா !

விடிய விடிய அழுதுகொண்டிருக்கும்
உறவினர்களைத் தாண்டி
கண்டிப்பாக இந்தமுறை
நம் விசேசமான செய்தியை
சொல்லிட வேண்டும்
நம்மில் யாரோ ஒருவர் என்ற ஆர்வத்தில்

வந்து கொண்டிருக்கிறேன் நான் விரைந்து !
இறந்த தாத்தாவிற்கு
நன்றியைத் தெரிவித்தபடி !
என் மாமன் மகளே உன்னைக் காண !

எழுதியவர் : ராஜேஷ் 03 (16-Jun-13, 2:47 pm)
பார்வை : 349

மேலே