மழலை !

மழலை !

மழலை !
இல்லற வாழ்வின்
இலக்கிய பரிசு !

சொல்லா சுகங்களை
சுருக்கி செதுக்கிய
சித்திரம் !

நீ
இறந்தகால தேடல் !
நிகழ்கால இன்பம் !
எதிர்கால கனவு !

இலக்கணம் இன்றி
சிறக்கும் மொழி - உந்தன்
மந்திரமொழி என்னும்
மழலை மொழியன்டோ !

உன்
ஒரு சுவைக்கு
அறுசுவையும் தோற்கும்
அற்புதம் !

குழலும் யாழும்
நீயில்லாத இடத்தில்
ஒலிப்பதே சிறப்பு !

உன்
பிஞ்சு விரல்
நெஞ்சில்பட
வையகம் சுருங்குது !

உன்னை பார்த்த
பூக்களும்
விருப்புடன் மடிகின்டன
சிரிப்பதற்கு நீ
இருக்கிறாய் என்று !

நீ
எந்தன் இன்னொரு நிஜம் !

நீ
பெற்றோர் பட்டத்தை
எமக்களித்தாய் - என்னை
மதியாதார் பட்டமெல்லாம்
வெறும் பட்டமே என்னும்
வேதத்தையும் விதைத்தாய் !

எல்லா வேதமும்
உன்னை ஏற்கும் - நீயோ
பொது வேதம் !!

"உங்கள்
மனம் மழலையென மாறாதவரை
தேவனின் பரலோகம் செல்லமாட்டீர் "!
என்னும் வேத வாக்கு
மாட்சிக்கு சாட்சி உனக்கு !

நீ
எதுகை மோனை
எட்டிபார்க்கும்
குட்டிக்கவிதை ! என்
சுட்டிக்கவிதை !!

எழுதியவர் : nashe (26-Jun-13, 11:13 am)
சேர்த்தது : mohd farook
பார்வை : 74

மேலே