உணர்வைச் சொல்வதால் தப்பில்லை
ஒட்டகத்தின் உடலில் ஓவியமா
ஓயாத விரல்களின் ஒய்யாரமா !
விலங்கின் தோலென்ன வரையுமிடமா
விளங்காமல் செய்திட்ட வரைபடமா !
வடித்திட்ட கைகளுக்கு வாழ்த்துதான்
வலிக்கிறது ஆனாலும் என் இதயம் !
வாயில்லா உயிர் துடித்திருக்கும்
தேய்ந்த மேனியால் வருந்திருக்கும் !
கலைத்திறனை காட்டிட இடமுண்டு
விலைப்பெற வரைந்திட வழியுண்டு !
வேண்டுகிறேன் அன்புடன் ஓவியரை
ஐந்தறிவு பிராணிகளும் உயிர்களே !
ஓவியத்தை ரசித்தாலும் ஒப்பவில்லை
உணர்வை சொன்னதால் தப்பில்லை !
(ஓவியரைக் குறை கூறும் எண்ணமில்லை
ஒட்டகத்தை நினைத்து எழுதினேன் )
பழனி குமார்