உணர்வைச் சொல்வதால் தப்பில்லை

ஒட்டகத்தின் உடலில் ஓவியமா
ஓயாத விரல்களின் ஒய்யாரமா !

விலங்கின் தோலென்ன வரையுமிடமா
விளங்காமல் செய்திட்ட வரைபடமா !

வடித்திட்ட கைகளுக்கு வாழ்த்துதான்
வலிக்கிறது ஆனாலும் என் இதயம் !

வாயில்லா உயிர் துடித்திருக்கும்
தேய்ந்த மேனியால் வருந்திருக்கும் !

கலைத்திறனை காட்டிட இடமுண்டு
விலைப்பெற வரைந்திட வழியுண்டு !

வேண்டுகிறேன் அன்புடன் ஓவியரை
ஐந்தறிவு பிராணிகளும் உயிர்களே !

ஓவியத்தை ரசித்தாலும் ஒப்பவில்லை
உணர்வை சொன்னதால் தப்பில்லை !


(ஓவியரைக் குறை கூறும் எண்ணமில்லை
ஒட்டகத்தை நினைத்து எழுதினேன் )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Jun-13, 10:14 am)
பார்வை : 92

மேலே