நாளை இந்தியா வரும் பசில் ராஜபக்சே என்ன பேசப் போகிறார்.. 13 A...? அப்படியென்று யார் சொன்னது...?

தமிழர்களும் ஆட்சியில் பங்கு பெரும் திட்டம் தான் ராஜீவ் காந்தி ஜெயவர்தனே ஒப்பந்தம் என்று வேண்டுமென்றே பொய் சொல்கிறார்கள்...
என்று கருதலாமா...?

பசில் ராஜபக்சே ஜூலை 4 - ம் தேதி அரசு பயணமாக மூன்று நாள் அரசு விருந்தாளியாக வருகிறார்...இலங்கையின் பொருளாதார மேம்பாடு அமைச்சராக உள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவா சங்கர் மேனன் அவர்களை சந்தித்து பேசுகிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

அவ்வாறும் இருக்கலாம்..ஆனால் அரசியல் சட்ட திருத்தம் 13 A குறித்து தான் பேசுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா..?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா அவர்கள் சில வாரங்களுக்கு முன் இவ்வாறு கூறினார். இந்திய அரசு இலங்கைப் போருக்குப் பின் இலங்கை தமிழர்களை கைகழுவி விட்டது என்று..டெல்லி அரசியல் செய்து கொண்டிருக்கும் சிபிஅய் கட்சியின் தலைவர் பொய் சொல்லுவாரா என்ன..?

பிறகு ஏன் ததேகூ மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்களை, அதிகாரிகளை கூப்பிட்டு பேசுகிறார்கள்...ஒரு நாடு என்று இருந்தால் பேசத் தானே செய்வார்கள்...அதுவும் இந்தியாவுக்கு அண்டை நாடு....இருநாடும் பேசுவதற்கு எவ்வளவு விசயங்கள் இருக்கையில்,

சதா எப்பொழுதுமே இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெறுவது குறித்து தான் பேசுகிறார்கள் என்று ஏன் கூறுகிறது ஊடகங்கள்..? ஆட்சியாளர்கள்..!

திரு மு.க.அவர்கள் சொல்லவில்லையா..? டெசோ மாநாட்டில் தீர்மானம் எல்லாம் இயற்றக் கூடாது என்று மத்திய அமைச்சர்கள் கூறிய போது, இவ்வாறு கொதித்து போய் சொன்னார் திரு மு.கருணாநிதி அவர்கள்.

அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...நாங்கள் தமிழ் நாட்டில் அரசியல் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்களா...? என்று.

அதுபோல காங்கிரஸ் அரசு ஏன் இலங்கை விவகாரத்தை வைத்து தமிழ் நாட்டில் அரசியல் செய்யக் கூடாது..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (3-Jul-13, 4:41 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 89

மேலே