கிறுக்கிய தத்துவங்கள்.... (பகுதி 2)

26. நமக்கான பாதை எதுவென்று தெரிந்து கொண்டு முன்னேறுவது தான் புத்திசாலித்தனம்...

27. சோம்பல் என்பது கிடைக்க வேண்டியவைகளையும் தடுத்து விடும்...

28. ஒரு சிறு புன்னகை பகைமையை விலக்கி வைக்கும்....

29. மரண படுக்கையில் கூட உன்னால் இயன்றதை செய்யலாம் உனக்குள் ஒரு ஆற்றல் இருந்தால்...

30. குடும்பம் என்பது காற்றடைத்த பலூன் போன்றது, அதிகமாக அழுத்தம் கொடுத்தாலும் வெடித்துவிடும், லூசில் விட்டாலும் காற்று போய் விடும்...

31. நேசம் வெளிப்படும்போதுதான் ஒருவன் மனிதனாகிறான்...

32. அதிகாரம் என்பது ஆணவத்தால் அமைந்து விட கூடாது, அன்பால் ஆளப்பட வேண்டும்....

33. சந்தர்பங்களும் சூழ்நிலையும் ஒருவனுக்கு சிறந்த ஆசான்... அவனின் உண்மை பண்புகளை அது வெளிக்கொண்டு வரும்...

34. வாழ்க்கை என்பது வாழ்வது இல்லை, பிறர் மனதை அன்பால் ஆள்வது ....

35. என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை என்னால் தான் முடியும் என்பது அகம்பாவம்.....

36. ஒரு நிமிடம் தோன்றும் கோபத்தையும் உணர்ச்சிகளையும் அடக்கி ஆள தெரிந்து விட்டால் வாழ்வை வென்று விடலாம்...

37. வாழ்வின் பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் ஒரு பகுதி தான் காதல்.... இருந்தும் முக்கியமானது.....

38. வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போவதல்ல, வாழ வைத்து பார்ப்பது ...

39. வெற்றியும் தோல்வியும் நம் மன உறுதியை பொறுத்தது....

40. முடியாது என்று ஒதுங்குவதை விட முயன்று பார்த்து தோற்பது மேல்....

41. நட்பின் மொழி வார்த்தைகளிலில்லை , அதன் அர்த்தங்களில் உள்ளது....

42. சொந்தங்களை பிரிக்க வல்லது கொடுக்கல் வாங்கல். கவனத்தோடு செயல் படாவிட்டால் உறவுகள் சிதறி விடும்...

43. மறதி என்பது துன்பத்தை மறக்க இயற்கை நமக்களித்த கொடை. அது மட்டும் இல்லாவிட்டால் உலகம் துன்பத்தில் மூழ்கி இருக்கும்...

44. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் தெரிந்தால் மட்டுமே ஒருவருக்கு வாக்கு கொடுக்க வேண்டும்....

45. எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அடுத்த துன்பத்தை எதிர்நோக்கும் தைரியம் இருந்தால் துன்பம் கண்ணுக்கு தெரிவதில்லை ....

46. அன்பும் நேசமும் இருவழி பாதையாக இருக்க வேண்டும்....

47. நாமே நம்மை கட்டுப்படுத்தும் வித்தையை கற்று விட்டால் உலகம் நம் வசமாகும்....

48. பிடிவாதம் என்னும் வாதம் நம்மை ஆட்கொண்டிருக்கும் வரை விவாதங்கள் நீண்டு கொண்டே தான் போகும்.....

49. சட்டென்று தோன்றும் கோபம் சட்டென மகிழ்ச்சியை மறைத்து விடும் ....

50. ஒரு மனிதனை கவுரவமிக்கவனாக வாழ செய்வதில் கல்விக்கு பெரும் பங்கு உண்டு...

எழுதியவர் : ஜீவா (4-Jul-13, 7:48 am)
பார்வை : 100

மேலே