ஆத்திகமும் நாத்திகமும்

கடவுள் கருவறையினின்று,
ஏழையின் வயிறு போய்
சேர்வது
ஆத்திகமே...

ஏழையின் வயிறு தொட்டு,
கடவுள் மனம் பசியாற
காண்பது
நாத்திகமே....

ஆத்திகமும்,
நாத்திகமும்,
கடவுள் கருவறைக்கும்,
ஏழ்மையின் அடி வயிற்றிக்குமிடையே,
உசலாடும்
ஒரு மெல்லிழை காற்றையே.......

எழுதியவர் : துளசி வேந்தன் (4-Jul-13, 9:24 am)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே