உன் காதோர இளம் கூந்தல்

இரவு நேர பேருந்தின்
நீல விளக்கொளியில்
உன் காதோர
இளம் கூந்தலை ரசிக்கும்
எனது மனம்

ஜன்னல் வழியே
மெல்ல எட்டிப் பார்த்தால்
வைரக் கற்களை
தூவி விட்டது போல
சிதறிக் கிடக்கும்
கட்டிடங்களின் விளக்கொளியை
ரசிக்கும் எனது கண்கள்

மெல்ல உன்னை தொட்டு விடத்
துடிக்கும் என் விரல்கள்....

அதை அடக்கி வைக்கும்
என் சிந்தை...

வேலை நிமித்தமாக
வெளியூருக்கு சேர்ந்து செல்லும் நம்
நட்பு கெட்டு விடக் கூடாதே

காதலை விட
அழுத்தமானது நட்பு....

எழுதியவர் : சாந்தி (8-Jul-13, 11:38 pm)
பார்வை : 69

மேலே