நகைச்சுவை28

பெண் வீட்டுகாரர் ; என்னங்க !மாப்ளை எப்டி இருப்பார் ?
தரகர் ;மாப்ளை ரொம்ப நல்லவர் ஆனா?
பெ.வீ ;ஆனா?
தரகர் ;எப்போதும் தண்ணிலேயே இருப்பார்
பெ.வீ.; வேற ஏதும் உண்டா?
தரகர் ; நல்ல குணமானவர் ..ஆனா?
பெ.வீ ;ஆனா?
தரகர்;நல்ல மணத்தோட இருப்பார்
பெ.வீ;என்ன?
தரகர்.;சிகரெட் குடிப்பார்.
பெ.வீ.; வேலைக்கு போறாரா?
தரகர் ;வேலைக்கும் போகல நல்லா சாப்ட்ரதுதான் அவர் வேலையே ...
பெ.வீ; இவ்வளவு வெளிப்படையா சொல்றீங்க மாப்ளைய பத்தி ...
தரகர்; நீங்க உங்க பொண்ண கொடுத்துட்டு நாளைக்கு உங்க பொண்ணு கண்கலங்கி வந்து நின்னா... என்ன பொய் சொன்னேன்னு திட்ட மாட்டிங்கல்ல...அதான் ..ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்த பண்ணி ...நல்ல பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாது பாருங்க ...அதான் நா உண்மையே எப்போதும் சொல்றேன் ...
பெ.வீ; நீ தான்யா நல்லா தரகர் ...உன்ன மாதிரி பார்த்ததே இல்லையா ...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (15-Jul-13, 10:26 am)
பார்வை : 415

சிறந்த நகைச்சுவைகள்

மேலே