கவிதையாய் சொல்லவைத்தாய்

காதலின் காயத்தை கூட கவிதையாய் சொல்லவைத்தாய்...
விழிகள் சிந்திய கண்ணீர் துளியில் கவிதை எழுத கற்றுத்தந்தாய்....

நான் விழுந்து கிடந்த நொடிகளில் எல்லாம்
கவிதை பாடி எழுந்தேன் உன்னால்..

இருளில் கிடந்து தவித்த நொடியில்
கவிதை ஏற்றி நடந்தேன் உன்னால்....

வறுமை பார்த்தேன்... கவிதை சொன்னேன்...
தோற்றுப்போனேன்... கவிதை சொன்னேன்...
தனிமை கொண்டேன்... கவிதை சொன்னேன்..
வலியில் துடித்தேன்.... கவிதை சொன்னேன்...

இப்படியாக எனக்குள் என்னைவிட அதிகமாய்...
கவிதை நிறைந்து போனது என்னவோ
உன்னால் தானே பெண்ணே....

எழுதியவர் : துளசி தாசன் (16-Jul-13, 7:31 am)
சேர்த்தது : sharala
பார்வை : 139

மேலே