தொடரும் உனக்கான என் தேடல்கள்...
என் கண்களில் தோன்றி
உன் கண்களில் கலக்கும் முன்பே
கலைந்தது என் காதல் கண்ணீரில்..
முதல் காதல்.., மூச்சு உள்ள
வரை நீங்கா உன் நினைவுகள்..
ஆரா தழும்பாய் என்றும்
என் இதயத்தில் வலித்து கொண்டே
உன்னை நினைவு படுத்தி
கொண்டு இருக்கும்....
என் வாழ்க்கை மாறும் ஆனால்
உன் நினைவுகள் அல்ல....
என் பயணம் மாறும் ஆனால்
உன் தேடல்கள் தொடரும்...
என்றும் உன் நினைவுகளுடன்....