sugitha - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : sugitha |
இடம் | : kovai |
பிறந்த தேதி | : 25-Jun-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 546 |
புள்ளி | : 33 |
படபடக்கும் பட்டாம்பூச்சியின்
சிலு சிலுக்கும்
இளஞ்சிவப்பு இறக்கைகளும்
அதை அனைக்கும்
டைட்டன் தடக்கைகளும்!
தாழம்பூ தலைகோதும்
மருதாணி மச்ச
விரல்களும் விழி
திருடி வியப்பூட்டுதே!!?
நெற்றி பொட்டில்
நெளிநெளியாய் குட்டி
பாம்பின் குதூகலம்!
வகிட்டில் கொஞ்சம்
ஒற்றி ஏடுக்கும்
வியர்வை வரம்
பெற்ற கைக்குட்டை!
இத்தனை அழகா!??
இதயம் எங்கெ???
தேடலில் தொலையும்
தொல்லைகளில் இதுவும்ஒன்று!
கைப்பேசி கதைக்கும்
வேளைகளில் அவள்
கவிதைகள் கட்டறுக்கும்
காதோரம்! நகச்சாயம்
நடு உச்சியிலும்!
உதட்டுச்சாயம் உள்
மத்தியலும் பாயுதே...
சிற்றிடை சினுங்களில்
சில்லு சில்லாய்
சிதறிப் போனதே
சிறுஇதயக் க
காதல் தோல்வியில் ஆண்கள் பெண்களை குறை கூறுவதைப் போல் பெண்கள் கூறுவதில்லையே.ஏன்?
உன்னால் என் இதழ்கள்
சிதறிய புன்னகையை விட
உன்னை எண்ணி என்
கண்கள் சிந்திய கண்ணீர்
துளிகளே அதிகம்....
வலியை தாங்கவும் முடியாமல்
வலியால் வாழவும் தெரியாமல்
நித்தமும் உன் நினைவுகளால்
தினம் தினம் மரணிக்கும் என்னை
நீயே கொன்று விடு...
பாவம் என் இதயம்
துடிப்பதையாவது நிறுத்தட்டும்...
அத்தபெத்த மவனே அத்தானே
பித்தான என்மனசுப் புரியாதா ?
ஒத்தயில விட்டுபுட்டுப் போனாயே
குத்தமென்ன கண்டுபுட்ட சொல்லிவிடு ??
உத்ததுணை யாயிருப்பே னுதானே
பெத்தவளும் கட்டி வச்சா
சொத்து வெளிய போகுமேனு
சேத்துக்கிட்ட என்னயும் நீதான் ....!!
ரத்த சொந்தம் வேணாமுன்னு
மெத்த படிச்சவுக சொன்னாக
பித்துபுடிச்சு என்னையே தான்
உத்தமனே தாலி கட்டிபுட்ட....!!
பெத்தபுள்ள கொறையா பொறக்க
மொத்த காரணம் நாந்தானா ?
தத்தளிக்கேன் கரையில மீனா
பத்திரமா கர சேப்பாயா....??
மத்தளத்து ரெண்டுபக்கம் போல
நெத்தம் அடி படுகிறேனே
சத்தங் காட்டாம அழுவுறேனே
புத்தி கெட்டு போவதேனோ .....???
எண்ணிய எண்ணங்களும்
கண்ட கனவுகளும் நிஜமாக
நாள் ஒன்று கூடியது இன்று...
கூடல்களும் ஊடல்களும்
நித்தமும் நினைவாகிப் போக ..,
கொண்ட காதல் மட்டும்
என்றும் நெஞ்சில் விலகாது..,
கை கோர்த்த கரங்கள் இரண்டும்
காதல் கொண்ட இதயம் இரண்டும்
இருவரி குறள் ஒன்றிணைந்து
ஒரு பொருள் தருவது போல்
அர்த்தமாய் விளங்கி
எல்லா செல்வங்களும் பெற்று
வாழ்க்கை இன்பமாய் மலர
வாழ்த்துக்கள்..
நண்பர்கள் (64)

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

S.ஜெயராம் குமார்
திண்டுக்கல்

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு
