நெய்வேலி ஸ்ட்ரைக் வாபஸ் - 13 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது...! ஆனால்...?!

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு எடுத்த முடிவை கண்டித்து கடந்த 3 -ம் தேதி இரவு முதல் என்.எல்.சி. தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கினர். ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், துண்டு பிரசுரம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து கடந்த 13 - ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர். இதில் 177 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் என்.எல்.சி. யின் பங்குகளை தமிழக அரசுக்கே விற்பனை செய்ய மத்திய அரசும், செபியும் நேற்று ஒப்புக்கொண்டன. இதையடுத்து, தொழிலார்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று கடந்த 13 நாட்களாக நீடித்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு 7 மணி முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இரவு 10 மணி ஷிப்டில் அணைத்து தொழிலாளர்களும் பனி பணி புரிந்தனர்.
13 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது...பணிகள் முடங்கியுள்ளன..ஆனால் கரண்ட் மட்டும் கட்டே ஆக வில்லை. எப்படி..? ஒரே விசித்திரமாக உள்ளதே...என்பவர்களுக்கு, நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் கரண்ட் அனைத்தும் தமிழ் நாட்டிற்கு
கொடுக்கப்படுகின்றனவா...? அல்லது
பேருக்கு ஒரு ஐந்து சதவீத கரண்டை கொடுத்து விட்டு ஏனைய அனைத்தையும் திராவிட நாடுகளுக்கு கொடுக்கிறார்களோ..? என்று கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்...!
சங்கிலிக்கருப்பு