கனவில் நிஜங்கள்

கனவென்று தெரிந்தும் உன் கை சேர சுவாசிக்கிறேன் இதுவும் சுகமே!

நிஜங்கள் சுடும்போதும் கனவுக்கில்லை எல்லை !

இன்றைய தினம் உன் நினைவில் நான் என் கனவில் நீ!

கனவில் மட்டும் வருகின்ற கணவனே ! உன் அன்பை பகிர்வாயா ?

உன் மடி மீது தூங்க வேண்டும் உன் முகம் பார்த்து சிரிக்க வேண்டும் உன் குழந்தையாய் நான்.

உலகம் அறியவில்லை உன்னோடு நானிருக்கையில். உலகம் அறிந்து விட்டேன் என்னருகில் நீயில்லை !

மாலை சூடி மணந்தாய் மாயையாகி போனாய்

எங்கிருந்து உன்னை கண்டறிவேன் ! உன்னோடு பார்த்த உலகத்தை நீயின்றி பார்த்து தவிக்கிறேன்

என் தவிப்பை அறிவாயா ?

எனக்கும் மனமுண்டு மனதினில் வலியுண்டு உன் மனம் அறியலையா ?

என் இறுதிவரை உடனிருப்பாய் என்றிருந்தேன் என் இறுதி உணர்வுகளை அறுத்தெரிந்து சென்றாயே!

என்றேனும் உணர்வாயோ உன் உறவின் என் மனதின் ஆழத்தை ?

காத்திருப்பதில் சுகம்தான் கனவில் நிஜங்கள் சுடும்வரை !

எழுதியவர் : (16-Jul-13, 10:56 pm)
சேர்த்தது : sakthy
பார்வை : 80

மேலே