கனவில் நிஜங்கள்
கனவென்று தெரிந்தும் உன் கை சேர சுவாசிக்கிறேன் இதுவும் சுகமே!
நிஜங்கள் சுடும்போதும் கனவுக்கில்லை எல்லை !
இன்றைய தினம் உன் நினைவில் நான் என் கனவில் நீ!
கனவில் மட்டும் வருகின்ற கணவனே ! உன் அன்பை பகிர்வாயா ?
உன் மடி மீது தூங்க வேண்டும் உன் முகம் பார்த்து சிரிக்க வேண்டும் உன் குழந்தையாய் நான்.
உலகம் அறியவில்லை உன்னோடு நானிருக்கையில். உலகம் அறிந்து விட்டேன் என்னருகில் நீயில்லை !
மாலை சூடி மணந்தாய் மாயையாகி போனாய்
எங்கிருந்து உன்னை கண்டறிவேன் ! உன்னோடு பார்த்த உலகத்தை நீயின்றி பார்த்து தவிக்கிறேன்
என் தவிப்பை அறிவாயா ?
எனக்கும் மனமுண்டு மனதினில் வலியுண்டு உன் மனம் அறியலையா ?
என் இறுதிவரை உடனிருப்பாய் என்றிருந்தேன் என் இறுதி உணர்வுகளை அறுத்தெரிந்து சென்றாயே!
என்றேனும் உணர்வாயோ உன் உறவின் என் மனதின் ஆழத்தை ?
காத்திருப்பதில் சுகம்தான் கனவில் நிஜங்கள் சுடும்வரை !