வாலி வாழிய நீ

சந்தத்திற்கு பாடல் தந்தாய்
பாடலில் சந்தம் தந்தாய்
காலத்திற்கும் அழியாத
பாடல் பல்லாயிரம் தந்தாய்
நீ மறையவில்லை உனது
பாடலில் வாழுகின்றாய்
தமிழ் தாயின் மைந்தனே
உன்னை தாலாட்டிய திரை உலகை
கண்ணீரில் மிதக்க விட்டாய்
பிறப்புக்கும் இறப்புக்கும்
பாடல் தந்தாய்
மெய் என்று மேனியை யார் சொன்னது
என்று முன்பே பாடிவிட்டாய்
நீ இன்னும் உந்தன் பாடல் வரிகளில்
பசுமையாக இசையின் கீதமாக
வாழுகின்றாய்
வாலி வாழிய நீ

கோவை உதயன்

எழுதியவர் : (19-Jul-13, 5:34 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
Tanglish : vaali vaaliya nee
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே