நேசம்-ஆனந்தி
பார்வைகளை இமைக்கு
நங்கூரமக்கி விட்டு
புன்னகையை இதழுக்கு
சூட்டிவிட்டு
நினைவுகளை நித்திரையில்
தவழவிட்டு
வார்த்தைகளை வானுக்கு
தள்ளிவிட்டு
இப்போது தவித்து சொல்
என்றால்
காத்திருந்த காலத்தையும்
பூத்திருந்த நேசத்தையும்
என் கனவு
சாம்ராஜ்யத்தையும்
எப்படி விளக்குவேன்
வேதியியல் நிகழ்வாய்....
சமர்ப்பித்தவர்:
ஆனந்தி.ரா