அரசு தொட்டிலில் .....ஓர் அக்னி குஞ்சு ...!!

உதிரத்துடன்
உயிர் கொடுத்து
பத்து மாதம்
கர்ப்பபைக்குள் அடைகாத்தவளே....!

கருவிழிகளை
இமை காப்பது போல்
கர்ப்பபைக்குள் எனை காத்தவளே ...

சிறகுகள் கொடுத்த
தாய்மையின் சிகரமே ....!

அடைகாக்கையில்
அடையாளம் தெரியாததால் - தானே
பாசத்துடன் பாலுட்டி மகிழ்ந்தாய் .....?

பூவுலகில் - நான்
பூத்தவுடன்
பெண் பால் என்பதால்
கள்ளிப்பாலை
தாய்ப்பாலாக்க துணிகிறாயே....?

அரச மரத்தடியில்
அடி மேல் அடி வைத்து
தாய்மைக்கு ஏங்குவோரின்
அருமை ..நீ .. அறிவாயோ...?

உன் தாயும்
ஓர் பெண்பால்
என்பதால் தானே
நீயும் தரணியில் வாழ்கிறாய் ..!

தாயே ...
பத்து மத பாசத்துடன்
கொஞ்சம்
எனக்கு உயிர் பிச்சை கொடு...!

இன்று
அரசு தொட்டிலிலாவது என்னை அழவிடு ....!

நாளை நான்
சிறகடித்து பறக்க வேண்டும்
கள்ளிகளின் வேர் அறுக்க ....!


இந்த அக்னி குஞ்சு
வெந்து தனிய வேண்டும்
தாய்மையின் சிறப்புகளுடன் ....!
*********************************

எழுதியவர் : வெற்றி நாயகன் (25-Jul-13, 9:48 pm)
பார்வை : 98

மேலே