வாழ்நாள் முழுவதும் காதலிப்பேன் ...!!!

உனக்கு கவிதை எழுதி ...
எழுதி நீ காதலித்தாயோ ..
தெரியவில்லை -நான் கவிதையை ..
காதலித்து விட்டேன் ...!!!

இப்போதெல்லாம் கவிதையை ..
நினைத்துதான் ....
உன்னை விரும்புகிறேன் ....
கவிதையின் உணர்வில்தான் ..
உன்னை நேசிக்கிறேன் ...
கவிதை சிரித்தால்..
நீ சிரிக்கிறாய் ...!!!
கவிதை அழுதால் நீ அழுகிறாய் ...!!!

ஒரு வேளை நீ என்னை ..
விரும்பாது போனால்..
நான் கவலையே படமாட்டேன் ...
நான் கவிதையில் உன்னை
வாழ்நாள் முழுவதும் காதலிப்பேன் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-Jul-13, 10:27 pm)
பார்வை : 189

மேலே