ஈழ விதைகள் ...
இருதயமற்ற இலங்கை அரசே !
நன்றி
உங்கள் முடிவிற்கு .
நாதியற்ற நயவஞ்சகர்களே !
நன்றி
எங்கள் விடியலுக்கு .
ஈழம் வீழ்த்தப்படவில்லை !
விதைக்கப்பட்டு இருக்கிறது .
உன் ஏவுகணைகளால்.
எங்களை
ஏவிஉள்ளாய் !
நீ எதை சாதித்துவிட்டாய் ?
ஏன் இந்த கொக்கரிப்பு ?
நீ குடித்திறுப்பது !
மனித ரத்தம் .
நல்லதல்ல !
பிணம்தின்னி இலங்கை அரசே
உன் உயிர் போல தான் -பிறர் உயிரும்
விதை விதைத்து உள்ளாய்
வினை அறுப்பாய் .....