என் பிரிய மரமே ......!!

நித்தம் நித்திரை கலைந்ததும்
என் காட்சியில் - நீ ...!

புத்தம் புதிதாய் புத்துணர்வு
தருபவள் நீ ....!

முத்தம் கொடுப்பது போல் கிளைநீட்டி
முகமருகில் வருவாயே ....!

சத்தம் இல்லாமல் எதிர் வீடு
கிரயமானதால் -உனை

சுத்தமாய் வெட்டி சாய்க்க - புது
வீட்டின் திருப்பலி ஆவாயோ ....?

சித்தம் கலங்கிப் போவேன் - என்
பிரிய மரமே ...நீயின்றி ... !

பித்தம் பிடித்து விடும் - எனைப்
பிரிந்து நீ சரிந்தால்..... !

விபரீதம் நீ அறியாய் !
விடை கொடுக்க மனமுமில்லை !
விதி முடிந்து போயிற்றோ ?
விம்முகிறேன் ....... என் தருவே .... !!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Aug-13, 3:23 pm)
பார்வை : 67

மேலே