முடியும் என்று நினைத்தால் முடியும்.....!!!
காலுடைந்த மயில் நானே
கவலையில்லை மனம் இருக்கு....!!!! - அதில்
தோகை அது நம்பிக்கை
தோற்றுவிக்கும் எழில் உலகம்...!!!!
துவண்டு விழ நேரமில்லை
துள்ளி ஆடுவேன் கால்கள் வேண்டாம்....
காற்று வந்தே மனம் வீசும் -
கருத்தோடு வெற்றிக் கதை சொல்லும்...!!!
ஆட முடியும் எனச் சொல்லி
ஆனந்தமாய் மனம் ஆடும்.........!!!!
ஆடுகிறேன் இப்போது
அதற்கு உதவுவது என் பொய்க் கால் அல்ல....
அன்று துளிர்த்த
அழகு நம்பிக்கை......!!!