முடியும் என்று நினைத்தால் முடியும்.....!!!

காலுடைந்த மயில் நானே
கவலையில்லை மனம் இருக்கு....!!!! - அதில்

தோகை அது நம்பிக்கை
தோற்றுவிக்கும் எழில் உலகம்...!!!!

துவண்டு விழ நேரமில்லை
துள்ளி ஆடுவேன் கால்கள் வேண்டாம்....

காற்று வந்தே மனம் வீசும் -
கருத்தோடு வெற்றிக் கதை சொல்லும்...!!!

ஆட முடியும் எனச் சொல்லி
ஆனந்தமாய் மனம் ஆடும்.........!!!!

ஆடுகிறேன் இப்போது
அதற்கு உதவுவது என் பொய்க் கால் அல்ல....

அன்று துளிர்த்த
அழகு நம்பிக்கை......!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Aug-13, 5:17 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 87

மேலே