சுதந்திரதினம்

வெள்ளையனிடம் மண்டி இட்டு
வேர்வையை சிந்திய காலம்

கொள்ளையாய் அடிமை கொண்டு
கூனி குறுகிய நேரம்

போராட்டம் , சிறைகளும் மட்டுமே
அனுபவித்த துயர சம்பவம்

உண்மையை பேசினால் வன்மை
ஏன் ? என்று கேட்டால் அடிமை

சொந்த மண்ணில் கூட அன்று
நிமிர்ந்து நடக்க முடியவில்லை

ஏத்தனை தியாகிகள் ஏற்று கொண்டு
கடந்த வந்த துன்பங்கள் கோடி

சுதந்திர வேட்கை ஒன்றே மூலதனம்
சிந்தியது மணித்துளியாய் உதிரம்

வெள்ளையனை நம் மண்ணை விட்டு
இறுதியாய் ஒரு நாள் விரட்ட பட்ட

தேச தந்தைகளால் வீறு கொண்டு
அடியோடு முழுமை பெற்று

பெற்ற சுதந்திரத்தை பேணி காத்து
நினைவு கொள்ளும் இத் தருணம்

இனி பிளவு வேண்டாம் ஜாதி கொண்டு
ஒற்றுமையோடு உயர்வோம் நின்று

தலை வணக்குவோம் நம் தேசத்திற்கு
மரியாதை செய்வோம் மகான்களுக்கு

கவிஞன். இறையடிமை

எழுதியவர் : கவிஞன். இறையடிமை (15-Aug-13, 8:35 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 261

மேலே