அலுவலகத்தில் ஒரு நாள்........!

தலை நகரின் பிரதான வீதியில்
உள்ளதெங்கள் அலுவலகம்
வேலையென்றால் அவ்வளவல்ல
வெளியிலும் போக வழியுமில்ல
தாடி வளர்த்த தடியெரெல்லாம்
சிரித்து காலம் களிக்கிறாங்க
இடையிடையே இளம்பெண்கள்
அவர்களை அடித்து நல்லா சிரிக்கிறாங்க
வெளியில் நிற்கும் கூலியாளன்
வயிரெறிய பார்க்கின்றான்
காலையுணவை எடுத்து வந்து
முதலாளியிடம் கொடுத்த அவனை
அவனுக்காய் மறுபடியும்
போக சொல்லுது அந்த முதலாளியின் எடுப்பு
இடையில் அவன் வயிறு எப்படியென்று
யாரும் கேட்கவில்லை.
டாக்டராகும் அவன் மகளை
எண்ணியதால் சகித்திருப்பான்
அவன் முகத்தில் நான் அறிந்தேன்.
கூடி நின்று கும்மியடித்து
களைத்துப்போன அனைவருக்கும்
"காபி" ஊற்றியே அவனும் களைத்துவிட்டான்.
இறுதியில் என் மேசை வந்து வைத்து
காபி குடிங்க என்று சொன்னான்.
நான் என்ன சொல்ல
எங்கள் அலுவலகத்தில் உழைத்து உண்ணும்
அவனை நினைத்து எனக்கு நானே திட்டிக்கொண்டேன்.........!

எழுதியவர் : ACMSFA (17-Aug-13, 10:17 am)
பார்வை : 73

மேலே