திருக்குறள் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

உலக பொதுமறை - திருக்குறள் பற்றிய சில இனிய தகவல்கள்.

14,000 சொற்களில் பாடப்பட்டது.

42,194 எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது.

1330 பாக்களை கொண்டது.

133 அதிகாரங்களை உடையது.

1812 ம் ஆண்டு - ஓலைச்சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது
.
1730 ம் ஆண்டு- லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

ஏழு - எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ள சொல்.

ஒன்பது – திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்.

கோடி – ஏழு இடங்களில் இடம்பெற்ற சொல் .

37 –பயன்படுத்தபடாத தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை.

ஒள - திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து.

னி - அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து.

ளீ,ங - ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்.

தமிழ் & கடவுள் – திருக்குறளில் இடம்பெறாத இரு சொல்கள்..

குறிப்பறிதல் - இரு முறை பயன்படுத்தப்பட்ட அதிகாரம் (பொருட்பால் – அமைச்சியல் & காமத்துப்பால் – களவியல்).


கான்ஸ்டன்டைன் ஜோசேப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் - முதன் முதலில் மொழிபெயர்த்தவர்.

ஜி.யு,போப் - முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

மணக்குடவர் - முதன் முதலில் உரை எழுதியவர்.

தஞ்சை ஞானப்பிரகாசர் - திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்.

அனிச்சம், குவளை - திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்.

பனை, மூங்கில்- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்

நெருஞ்சிப்பழம் - திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்.

குன்றிமணி -திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை


80 -உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள்

உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் ---> திருக்குறளின் மற்ற பெயர்கள்

நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் --> திருவள்ளுவரின் மற்ற பெயர்கள்.


ஆதாரம் : wikipedia.

தினமும திருக்குறளை படிப்போம்,
உள்ளத்தையும் உலகையும் தூய்மைப்படுத்துவோம்.

-------------------------------------------இரா,சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (20-Aug-13, 1:35 am)
பார்வை : 288

மேலே