திருக்குறள் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
உலக பொதுமறை - திருக்குறள் பற்றிய சில இனிய தகவல்கள்.
14,000 சொற்களில் பாடப்பட்டது.
42,194 எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது.
1330 பாக்களை கொண்டது.
133 அதிகாரங்களை உடையது.
1812 ம் ஆண்டு - ஓலைச்சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது
.
1730 ம் ஆண்டு- லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
ஏழு - எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ள சொல்.
ஒன்பது – திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்.
கோடி – ஏழு இடங்களில் இடம்பெற்ற சொல் .
37 –பயன்படுத்தபடாத தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை.
ஒள - திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து.
னி - அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து.
ளீ,ங - ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்.
தமிழ் & கடவுள் – திருக்குறளில் இடம்பெறாத இரு சொல்கள்..
குறிப்பறிதல் - இரு முறை பயன்படுத்தப்பட்ட அதிகாரம் (பொருட்பால் – அமைச்சியல் & காமத்துப்பால் – களவியல்).
கான்ஸ்டன்டைன் ஜோசேப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் - முதன் முதலில் மொழிபெயர்த்தவர்.
ஜி.யு,போப் - முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
மணக்குடவர் - முதன் முதலில் உரை எழுதியவர்.
தஞ்சை ஞானப்பிரகாசர் - திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்.
அனிச்சம், குவளை - திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்.
பனை, மூங்கில்- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்
நெருஞ்சிப்பழம் - திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்.
குன்றிமணி -திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை
80 -உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள்
உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் ---> திருக்குறளின் மற்ற பெயர்கள்
நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் --> திருவள்ளுவரின் மற்ற பெயர்கள்.
ஆதாரம் : wikipedia.
தினமும திருக்குறளை படிப்போம்,
உள்ளத்தையும் உலகையும் தூய்மைப்படுத்துவோம்.
-------------------------------------------இரா,சந்தோஷ் குமார்