என்னை அப்படி பார்க்காதே..!

கதிரவன்..
காலை எழுதும் கவிதை..!
நிலா...
இரவில் மிதக்கும் கவிதை..!
அலை...
கடலில் கரையும் கவிதை..!
மலை...
நிலையாய் நிற்கும் கவிதை..!
மழை...
மண்ணுக்கு பிடித்த கவிதை..!
மலர்...
மனதை மயக்கும் கவிதை..!
மது...
குப்பியில் அடைத்த கவிதை..!
காற்று...
தென்றலாய் தவழும் கவிதை..!
தாய்...
உயிராய் மாறும் கவிதை..!
தந்தை...
உழைப்பால் உயரும் கவிதை..!
கன்னி...
நிலத்தில் அசையும் கவிதை..!
காதல்..
கவிஞனுக்கு பிடித்த கவிதை..!

கவிதைகள் இப்படி பல இருந்தும்...
எனக்கு பிடித்தது கண்களால் நீ
எழுதும் பார்வை கவிதையே..!

எழுதியவர் : குமரி பையன் (26-Aug-13, 10:57 pm)
பார்வை : 166

மேலே