நான்
நான்
மரியானா ஆழியை விடவும்
ஆழமானவள்
சரித்திரம் அறிந்த
சர்க்கரவர்த்திகளின்
சாம்ராஜியங்களைக்கூட
சில சமயங்கள்
சஞ்சலம் செய்திருக்கிறேன்
பல சர்காக்களை
என் சக்தி கொண்டு
கவிழ்த்திருக்கிறேன்
என்னில் அடிமையாகாதவர்
உலகில் எந்த மூலையிலும்
இருக்க முடியாது
என்னை எப்படியும்
படித்துவிடும் ஆதங்கத்தில்
அத்தனை பேர் புறப்பட்டும்
அவர்கள்
தோல்வியைத் தவிர
வேறெதையுமே
சந்திக்கவில்லை
பாத்தி்ரத்துக்கு ஏற்ப
வசனம் சித்தரிப்பது
மட்டுமே என் வேலை
இரகசியங்கள்
என்னிடம் நில்லாது
கோபங்கள்
என்னிடம் தங்காது
ஓர் இழப்பை
இன்னொன்றால்
ஈடுகட்ட என்னால்
இயலாது
பிறப்பிற்கும்
இறப்பிற்கும்
முடிச்சிடாமல்
சாதலிலும் வாழவே
நான் பார்ப்பேன்
சின்ன ஏமாற்றங்கள்
எனை தழுவும் போதெல்லாம்
உயிருள்ள ஜடமாயும்
துளிச் சந்தோசத்தில்
வாணுயறப் பறப்பதாயும்
உனர்கிறேன்
என்னைப் படித்திட
இனியும் ஆவலா?
வேண்டாம்..
ஏனனில் நான்
அறிந்திடவும்
படித்திடவும் இயலாத
மர்மங்களின் தேசம்
இப்போது புரிகிறதா
நான் யாரென்று
நான் தான்
பென்னின் மனது: