சக்கரைநோய் காலில் புண்ணை விரைவில் ஆற்ற
காலில் புண்ணை விரைவில் ஆற்ற ஒரு புது முறை சிகிச்சை
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு காலில் அடிபட்டால் அவ்வளவு சீக்கிரம் ஆறாது இல்லையா? இதனை சரி செய்ய இப்போது புதிதாக ஒரு இயந்திரம்/ முறை வந்துள்ளது அதன் பெயர் ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரப்பி.
நாம் பொதுவாய் சுவாசிக்கும் போது உடலில் 20 % ஆக்சிஜன் தான் உள்ளே செல்கிறது. இது சிவப்பு அணுக்களில் சேர்ந்து உடலில் உள்ள திசுக்களுக்கு அனுப்புகிறது காயம் உள்ள இடத்துக்கு நிறைய ஆக்சிஜன் கிடைத்தால் சீக்கிரம் ஆறும்.
இந்த புது முறையில் - குறிப்பிட்ட இயந்திரம் மூலம் ஆக்சிஜன் தெரப்பி தருகிறார்கள். இந்த இயந்திரத்தின் உள்ளே நோயோளியை அனுப்ப, அவர் நல்ல ஆக்சிஜனை 100 சதவீதம் சுவாசிப்ப்பார். ஆக்சிஜன் இங்கு இரண்டு மடங்கு அழுத்தத்தில் இருக்கும். 100 சதவீத ஆக்சிஜன் நோயாளி உடலில் கலப்பதால் புண் சீக்கிரம் ஆறும். இந்த சிகிச்சை புண்ணின் தன்மையை பொறுத்து ஓரிரு வாரங்கள் எடுத்தால் - புண் ஆறுகிறது என்கிறார்கள்
தற்சமயம் சென்னை ஆயிஷா மருத்துவமனையில் "Serious Wounds Healing Unit " என்ற பிரிவில் இந்த சிகிச்சை கிடைக்கிறது
ஆயிஷா ஹாஸ்பிட்டல் முகவரி:
முகநூலிலிருந்து....
Engr.Sulthan