தோல்வி

என்னை புரிந்து கொள்ள
எவரும் இல்லை !!

வாழ வழியில்லை !!
சாக துணிவில்லை !!

சத்தமில்லா அழுகை மட்டும்
நான் சாகும் வரை !!

சத்தம் போட்டு பரிந்து பேச
எனக்காக எவரும் இல்லை !!

இல்லை என்ற சொல் மட்டும்
என் துணையாய் நான் சாகும் வரை !!

நான் வாழவும் ,சாகவும்
என் மௌனம் மட்டும்
நிரந்தரமாய் !!

என் வாழ்க்கை துணை
""தோல்வி "" என்ற சொல்
இருக்க நான் வாழ்வேன்
என் வாழ்வின் எல்லை வரை !!

சாகும் வரம் தா ? என்றேன் கடவுளிடம்.
கடவுள் என்னிடம் சொன்னார் ,
" உனக்கு தோல்விகள் பல உண்டு ,
நீ என் செல்ல பிள்ளை ,
சாவதற்கு அதற்குள் என்ன
அவசரம்"" என்று என்னை மடியில் கிடத்தி கொண்டார் கடவுள் !!

எழுதியவர் : தோல்வி (4-Sep-13, 4:30 pm)
Tanglish : tholvi
பார்வை : 105

மேலே