சந்தோஷ சுரங்கள்

ச விலிருந்து சௌ வரை


சந்தோஷத்தில் சதிராடியது
சாருலதாவின் இதயம்...
சிலையாக நின்றிருந்தவளை மெல்ல
சீண்டும் அவள் காதல் கணவன்
சுந்தரத்தை மையலுடன் நோக்கியவள்
சூழ்நிலையை கண்ணசைவில் விளக்கும்போது,
செதுக்கிய பொற்சிலை ஒன்று
சேலையில் உயிர் பெற்று வந்து
சைகையில் சாதுர்யம் காட்டிடும்
சொப்பன சுந்தரியாக தோன்றியதால்
சோர்வு களைந்து தீராத தாபத்துடன்,
சௌபாக்கியவதியிவள் தமை வந்து சேரும்

தருணத்திற்காக நிமிடங்களை விரலசைப்பில் நகர்த்திக் கொண்டிருந்தான் புதுமாப்பிள்ளை தவிப்புடன் மணமேடையில்...

*************************************************************

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (4-Sep-13, 7:11 am)
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே