பார்வையா அது அப்பப்பா

விழிகள் கடத்தும் நேசம்
அறிந்த பாசப் பைங்கிளி
அவள்...

அவளின் ஒற்றை பார்வையே
ஓராயிரம் கதை சொல்லும்
ஒரு மனதாக.....

அந்தி பொழுதில் ஆரவார
தெருவில் சாலை யோரம்
விரல்கள் கெஞ்சும்

ஒற்றைக் கால் தவத்தில்
அவள் வீசிச் செல்லும்
ஒரு பார்வையில்

பதறிப் படபட வென்று
தவித்திடும் யென் இதயம்
பரவசத்தில்.....

பற்பல உணர்வு களை
உன்னத ஆக உணர்த்தும்
கதிர் வீச்சை

இமை கொண்டு தடுத்திடுவாள்
அவள், என் மேலெழும்
கரிசனத்தில்

இல்லையெனில் ஒரு வீச்சில்
மதி மயங்கிய நான்,
ஓராயிரத்தில்....!!!!
மாயமாகிப் போவேனே....????

இருமனம் இணையும் திருமணத்திலும் இனிதாய் ஆராதிப்பேன் அவளை
ஆனால்,

இமை தாழ்த்தி ❤️❤️❤️


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (20-Sep-24, 9:28 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 7

மேலே