நாலு பேரு வேணும்

நாலு பேர் வேணும் – நாளை
நம்மை தூக்கி செல்ல

நாலு பேர் வரணும் – செத்த
உறவை ஒதுக்கி கொள்ள

நாலு பேர் சேரனும் – நம்மை
உலகில் உயர்ந்து நிற்க

நாலு பேர் மனமும் – என்றும்
உறைவாய் இருக்க நினைக்க

நாலு பேர் குணமும் – இன்னும்
நலமாய் உரிமை எடுக்க

நாலு பேர் இனமும் – அன்றும்
நிலையாய் வாழ எண்ண

நாலு பேர் உள்ளம் – என்றும்
நல்ல செயல்களே தங்க

நாலு பேர் போதும் – மனம்
முழுதாய் உண்மை கொள்ள

அந்த நாலு பேரை நமக்காய்
வல்ல அல்லாஹு ஆக்கி தரனும் !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (12-Sep-13, 10:55 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 82

மேலே