சூர்யா @ அருள்மொழிவர்மன் , பொள்ளாச்சி

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்..- செய்தி
(தினமலர் - 15.09.2013 ) ​


​அங்கங்கள் குறையாமல்
அழகோடு பிறந்திட்டால்
அகிலத்தில் வாழலாம்
ஆனந்த வாழ்க்கையே !

அளவில் சிறிதாகினும்
வடிவத்தில் மாறினும்
வளைந்து போனாலும்
வாழ்க்கை மாறிடும் !

பிறப்பால் ஊனமாகி
வளர்ந்திடும் மனிதரும்
வருந்திடுவர் நாளும்
உருகிடும் உள்ளமும் !

குறையுடன் பிறந்தும்
நிறைவிலா வாழ்வுடன்
விபத்தும் நிகழ்ந்தால்
விபரீதம் என்றுமே !

இளமைக் காலத்திலே
இவையாவும் நடந்திட்டு
தள்ளு வண்டியில் காலம்
தள்ளிடும் சூரியா இவரே !

ஊனமுள்ள உடலிலும்
உறுதியுள்ள உள்ளத்தால்
உலகை ஈர்த்திட்டார்
உரமேறிய அறிவாலே !

கணினி பயிற்சினை
கற்றார் கண்களாலே
கண்கவர் வடிவங்களை
படைத்தார் திறமையால் !

விருதும் பாராட்டும்
விழுந்தன காலடியில்
குவிந்தன பரிசுகளும்
குன்றாத உள்ளத்திற்கு !

வாழ்த்திடும் பலருடனும்
வாழ்த்துவோம் நாமும்
வாழ்ந்திட பல்லாண்டு
வையகத்தில் புகழுடனே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Sep-13, 8:50 am)
பார்வை : 51

மேலே