தம்பட்டம்
போர்முடிந்ததாய்பெரு முழக்கம் .
குதிரை குட்டியீன்ற யானை முட்டை போல
ஆங்காங்கே தோரணங்கள் அதன் நடுவில் காரணங்கள்
ஒடிந்துபோன ஓராயிரம் வீதிகளுக்கு ஒட்டு போட்டாயிற்று !
இடி இடித்து மின்னல் வெட்டி குடையும் பிடிச்சாச்சு !
காய்ந்த மரங்களுக்கு பச்சை முலாம் பூசப்படுகிறது !
தமிழர் கால் உடைத்து குளிருக்கு குதுகலமாய் சூப்பும் குடிச்சாச்சு !
சோனகர் தோல் உரித்து மத்தாளம் கொட்டலாச்சு !
பெய்யாத பெரு மழையில் பேய் நனைந்து
வாந்தி வருவதாய் தேரைகள் தேவாரம் பாடலாச்சு !
ஆனால் இன்னும் சுதந்திரம் வந்து போனதாய்
சுவடுகள் தானுமில்லை அங்கு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
